முல்லைத்தீவில் சிலிண்டர் பேரணி !

user 09-Sep-2024 இலங்கை 20 Views

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் எரிவாயு சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்லதற்கு தயாராக இருந்த 6 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்லத் தயாராக இருந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது குறித்த நபர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள், மற்றும் சிலிண்டர் ,மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை