மணிமேகலை vs பிரியங்கா சண்டை பற்றி அனிதா சம்பத் போட்ட பதிவு !

user 16-Sep-2024 பொழுதுபோக்கு 5 Views

குக் வித் கோமாளி ஷோவில் இருந்து மணிமேகலை விலகுவதாக அறிவித்து இருக்கிறார்.

போட்டியாளராக வந்திருக்கும் VJ பிரியங்கா தலையீடு அதிகமாக இருக்கிறது. புகார் அளித்தால் என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். சுயமரியாதை முக்கியம் என விலகி விட்டேன் என மணிமேகலை கூறி இருக்கிறார்.

இந்நிலையில் இது தான் கர்மா என அனிதா சம்பத் பதிவிட்டுள்ளார்.

யார் அடுத்தவரை கீழே போட்டு மிதிக்க நினைக்கிறாரோ, அவர் அதே போன்ற இன்னொருவரால் செருப்படி வாங்குவார் என அனிதா சம்பத் கூறி இருக்கிறார்.

தான் பாதிக்கப்பட்டு இருப்பதை தான் அனிதா சம்பத் இப்படி கூறி இருக்கிறார். ஆனால் அவர் பிரியங்காவை தாக்குகிறாரா அல்லது மணிமேகலையை சொல்கிறாரா என வெளிப்படையாக சொல்லவில்லை. அதனால் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

மேலும் மணிமேகலை ஷோவில் இருந்து விலகுவதாக நேற்று போட்ட பதிவில், "Guts🔥all the best mani" என அனிதா சம்பத் கமெண்ட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை