ஷபத் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் !

user 16-Sep-2024 உலகம் 5 Views

லெபனானில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இயக்கம் அடிக்கடி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வரும்நிலையில் இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் வடக்கு இஸ்ரேலில் உள்ள ஷபத் நகரம் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டநிலையில் அதனை நடுவானில் இடைமறித்து இஸ்ரேல் ராணுவம் அழித்தது.

இதேவேளை, லெபனானில் இருந்து இஸ்ரேல் நகரம் மீது ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், முதலில் சுமார் 20 ஏவுகணை வீசப்பட்ட நிலையில் 30 வினாடிகளுக்கு பிறகு 35 ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

பல ஏவுகணைகள் நடுவானில் இடைமறிக்கப்பட்டதாகவும்  சில ஏவுகணைகள் திறந்தவெளி பகுதிகளில் விழுந்தமையால் இதில் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை