அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்றுடன் நிறைவு!

user 12-Sep-2024 இலங்கை 7 Views

2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து தபால் மூல வாக்களிப்புக்களும் இன்று 12 மணியுடன் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த 4,5,6 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்கப்புகள் இடம்பெற்றிருந்ததுடன் மேலும் இரண்டு தினங்கள் மேலதிகமாக வழங்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் அனைத்து தபால்மூல வாக்களிப்புகளும் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. எவ்வாறாயினும், தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பித்த எந்தவொரு அரசாங்க ஊழியர்களும் இன்றுடன் தபால் மூல வாக்குகளைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதும் இன்றுடன் நிறைவடைந்துள்ளன. இன்று நண்பகல் 12.00 மணி வரை காலி மாவட்ட செயலகத்தில் இதற்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான தேர்தல் வைப்பு காலம் நேற்றுடன் நிறைவடைந்துள்ளதுடன், 10 அரசியல் கட்சிகளும் இரண்டு சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை