ஆளுநர் செந்தில் தொண்டமானால் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு !

user 09-May-2024 இலங்கை 3 Views

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் (Senthil Thondaman) அம்பாறை (Ampara) மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த விளையாட்டு அரங்கானது பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடனேயே டென்னிஸ் சங்கத்தின் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தமெந்த விஜயசிறி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விளையாட்டரங்கின் மூலம் அம்பாறை மாணவர்கள் தமது திறமைகளை வளர்த்துக்கொள்ள இது ஒரு சந்தர்ப்பமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை