யாழ். காங்கேசன்துறை - நாகபட்டினம் பயணிகள் கப்பல் இடைநிறுத்தம் !

user 06-Sep-2024 இலங்கை 19 Views

கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக  நாகபட்டினத்துக்கும் (Nagapattinam) காங்கேசன்துறைக்கும் (Kangesanthurai) இடையிலான கப்பல் போக்குவரத்தானது திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இந்த கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த கப்பலானது நேற்று (05) காலை நாகபட்டினத்தில் இருந்து புறப்பட்டு காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

இவ்வாறு வந்த கப்பலானது காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதற்கு பயணிகளுடன் தயாராகியுள்ளது.

இருப்பினும், கப்பலில் போதிய அளவு எரிபொருள் இன்மை காரணமாக அந்த பயணமானது திடீரென இடைநிறுத்தப்பட்டதுடன் பயணத்திற்கு தயாராக இருந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை