திருமண வாழ்விலிருந்து விலகுகிறேன் !

user 09-Sep-2024 பொழுதுபோக்கு 29 Views

பிரபல நடிகரான ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவி இத்திரைப்படத்திற்கு பிறகே, ”ஜெயம் ரவி” என்ற பெயர் பெற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து மணந்து கொண்ட நிலையில் , இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளன.

” நல்ல ஜோடி, கியூட் ஜோடி” என்று பெரும்பாலானவர்களால் அழைக்கப்படும் ஜெயம் ரவி - ஆர்த்தி இடையே சில நாட்களாகவே கருத்து வேறுபாடு இருப்பதாகவும், இதனால், இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் செய்திகள் பல வெளியாகின.

இதை மெய்ப்பிக்கும் வகையிலே, இன்ஸ்ட்ராகிமில் ஜெயம் ரவியுடன் எடுத்த புகைப்படங்களை நீக்குவது, அவரை unfollow செய்வது, தன் மகன்களுடன் இருக்கும் படங்களை நீக்குவது என பல சமிக்சைகளை வெளிக்காட்டி வந்தார் ஆர்த்தி.

எனினும் பிரிந்து வாழ்வது குறித்து இருவரும் வெளிப்படையாக பதிலளிக்காமல் இருந்தனர். இந்நிலையில்தான், இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெயம்ரவி.

அதில், இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாகவும், தங்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளம்ை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை