வானிலையில் மாற்றம் !

user 09-Sep-2024 இலங்கை 22 Views

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊவா மாகாணத்தின் சில பிரதேசங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை