தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம்!

user 13-Sep-2024 இலங்கை 8 Views

இரண்டு மாணவக் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலையடுத்து ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் இரண்டு மாணவர் குழுக்களுக்கிடையில் இன்று மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பல்கலைக்கழகத்தின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று மாலை 6 மணிமுதல் பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூட பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களையும் இன்று மாலை 6 மணிக்குள் பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை