Monday, September 16, 2024
யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று (23) திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாந்த்திற்கு வியம் மேற்கொண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க, ருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
இந்நிலையில் வைத்திய சாலை திறப்பு விழாவிற்கு சென்ற வைத்தியர் சத்தியலிங்கம் கூட்டத்தில் மக்களோடு மக்களாக அமர்திருந்தார்.
இது குறித்து சுமந்திரனின் தீவிர ஆதரவாளரான சுகிர்தன்,
மதியாதார் தலைவாசல் மிதியாதே... வைத்தியர் சத்தியலிங்கம் நேற்றய மந்திகை ஆதார வைத்தியசாலை கட்டட திறப்பு விழாவில் பங்குபற்றியிருக்க கூடாது என தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
வைத்தியர் சத்தியலிங்கம் அமைச்சராக இருந்த காலத்தில் தான் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் திடீர் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான புதிய கட்டட திட்டத்தை வெளிநாட்டு நன்கொடை ஊடாக கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் சுமந்திரனின் தீவிர ஆதரவாளரான சுகிர்தன், வைத்திய சத்தியலிங்கத்தை விமர்சித்துள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.