இந்தியாவின் பணக்கார நடிகைக்கு இணையான இடத்தை பிடித்த நடிகை திரிஷா

user 22-Apr-2024 பொழுதுபோக்கு 4 Views

20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வருபவர் திரிஷா. இவர் தற்போது விடாமுயற்சி, தக் லைஃப் என தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடிக்கிறார். மேலும் பாலிவுட்பக்கமும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். 40 வயதாகியும் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் திரிஷா விஜய்யின் Goat திரைப்படத்திலும் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸியான நடிகையாக மாறியுள்ள திரிஷா. தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் அதிகம் சம்பளம் வாங்கி நடிகை திரிஷா தான் என கூறுகின்றனர்.

இந்த நிலையில், சம்பள விஷயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யை திரிஷா மிஞ்சிவிட்டார் என தகவல் கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய் ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம்.

ரூ. 776 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் ஐஸ்வர்யா ராய், இந்தியாவின் பணக்கார நடிகை என அழைக்கப்படுகிறார். ஆனால், சம்பள விஷயத்தில் அவருக்கு இணையாக தற்போது திரிஷா வந்துவிட்டார் என திரை வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

நடிகை திரிஷா மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராய் இருவரும் இணைந்து மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை