வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

user 04-Jun-2024 இலங்கை 9 Views

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அத்துடன் வெள்ள அனர்த்ததில் , முழுமையாக சேதமடைந்த வீடுகளை அரச செலவில் முப்படையினரின் உதவியுடன் மீளக் கட்டுவதற்குமான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தொடர்பான பிரேரணையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அமைச்சரவையில் சமர்ப்பித்த நிலையில் அதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுள்ளது.

இதேவேளை, உலக சுற்றாடல் தின கொண்டாட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டை சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை