15 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் !

user 14-May-2024 இலங்கை 6 Views

பாடசாலை மாணவியொருவரை ஏமாற்றி ஆள் நடமாட்டமற்ற இடத்திற்கு அழைத்துச் சென்று காரொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பாடசாலை பஸ் சேவை சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பாடசாலை பஸ் சேவை சாரதியும் பஸ்ஸின் உரிமையாளருமான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

15 வயது பாடசாலை மாணவியொருவரே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்பட்டுள்ளார்.

சந்தேகநபரும் பாதிக்கப்பட்ட மாணவியும் பாடசாலை பஸ் சேவையின் போது அறிமுகமாகியுள்ள நிலையில் இருவரும் காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை