யாழ் ஆலயத்தில் திருட்டு !

user 27-May-2024 இலங்கை 6 Views

யாழ்ப்பாணம் ஆவரங்கால் சிவன் ஆலயத்தில் உண்டியல் உடைத்து திருட்டில் ஈடுபட்ட சந்தேகநபரொருவர் நேற்று (26) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேகநபர் அச்சுவேலி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் சந்தேகநபரிடம் இருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை