வாக்கு எண்ணும் பணிக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் !

user 29-May-2024 இந்தியா 5 Views

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிக்கு கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதிக்கும் 5 முதல் 20 பேர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், வாக்கு எண்ணிக்கை நாளன்று தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உதவியாக இருந்து பணிகளை மேற்கொள்வது இவர்களின் முதன்மையான பணியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை