எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் இன்று விசேட கூட்டம்!

user 01-Aug-2024 இலங்கை 19 Views

ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.

இதற்காக ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.

 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேம தாச தலைமையில் நடைபெறவுள்ள இந்த விசேட கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும், ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டணி தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை