அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு!

user 09-Aug-2024 இலங்கை 13 Views

ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர்களுகக்கு ஒதுக்கப்படுகின்ற சின்னங்களில் இருந்து இரு சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

 

இதற்கமைய சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்ற நாய் மற்றும் பன்றி சின்னங்கள் நீக்கப்பட்டுள்ளன.

தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வை புண்படுத்தும் சின்னங்களை தேர்தல்கள் ஆணைக்குழு நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 22 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீண்ட வாக்குச் சீட்டுகளை வடிவமைப்பதில் சாத்தியமான சிக்கல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை