இந்திய இராணுவம் இலங்கைக்கு வருகை!

user 13-Aug-2024 இலங்கை 7 Views

மித்ரசக்தி கூட்டு இராணுவப் பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்தியப் படையினர் நேற்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே பரஸ்பர நட்புறவை மென்மேலும் விருத்தி செய்யும் முக்கிய படிமுறையாக, வருடந்தோறும் ஏற்பாடு செய்யப்படுகின்ற இந்த மித்ரசக்தி போர்ப் பயிற்சியானது, எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதிவரை மாதுரு ஓயா பிரதேசத்தில் நடைபெறவுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் இந்திய இராணுவ வீரர்களே நேற்று மத்தள விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தனர்.

இந்திய இராணுவ படையினரை காலாட்படை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் வஜிர வெலகெதர, மித்ர சக்தி இராணுவ பயிற்சி பணிப்பாளர் மேஜர் ஜெனரல் தினேஷ் உடுகம, இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இவர்களை வரவேற்றனர்.

போர்ப் பயிற்சியில் இந்திய இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கேணல் ரவீந்திர அலவட் தலைமையில் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் இலங்கை இராணுவத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கஜபா படையணியின் 18 அதிகாரிகளும் 102 சிப்பாய்களும் பங்கேற்கவுள்ளனர்.

10 ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்த இராணுவப் பயிற்சிகள் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இலங்கையிலும் இந்தியாவிலும் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை