நைஜீரியாவில் பயங்கரவாதிகளின் தாக்குதல் : பரிதாபமாக 81 பேர் பலி

user 05-Sep-2024 உலகம் 32 Views

நைஜீரியாவில் (Nigeria) போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 81 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்பிரிக்க (Africa) நாடான நைஜீரியாவில் கடந்த சில ஆண்டுகளாக போகோ ஹாரம் பயங்கரவாதிகள் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் தாக்குதல் நடத்தி இதுவரை பல்லாயிரம் பேரை கொன்று குவித்துள்ளனர்.

இந்தநிலையில், நைஜீரியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள கிராமத்தினரை குறிவைத்து பயங்கர ஆயுதங்களுடன் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இந்தத் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 81 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

படுகாயம் அடைந்த பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் மாயமாகினர் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை