அருணாச்சலப் பிரதேசத்சத்தை இந்திய பிராந்தியமாக அங்கீகரித்த அமெரிக்கா!

user 21-Mar-2024 இந்தியா 5 Views

அருணாச்சலப் பிரதேசத்தை இந்திய பிராந்தியமாக அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.

 

அமெரிக்கா, எல்லைக் கட்டுப்பாடு கோட்டுக்கு அப்பால் நடக்கும் எந்த ஒரு அத்துமீறலையும் எதிர்ப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் தங்களுடைய நிலப்பரப்பு என சீனா அடிக்கடி உரிமைக்கோரி வந்தது.

இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் அருணாச்சலுக்கு சென்றபோது, சீனா தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.

இதுதொடர்பாக நேற்று (புதன்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்காவின் இணை செய்தி தொடர்பாளர் வேதாந்த் படேல்,

“அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் ஒரு பகுதியாக நாங்கள் அங்கீகரிக்கின்றோம்.

அப்பிராந்தியத்தின் மீது உரிமைகோரும் நடவடிக்கையாக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நடைபெறும் ஆக்கிரமிப்பு, இராணுவம், பொதுமக்கள் ஊடுருவல் போன்ற முன்னெடுப்புகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

அருணாச்சலப் பகுதிக்கு “ஜங்னான்” என பெயரிட்டுள்ள சீனா, அருணாச்சலப் பிரதேசத்துக்கு செல்லும் இந்தியத் தலைவர்களின் வருகைக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை