இஸ்ரேல் விமான தாக்குதல் !

user 22-Mar-2024 உலகம் 8 Views

காசாவின் மேற்குக் கரையில் நேற்று முன்தினம் (20) இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்த பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் தளபதி முஹம்மது ஹவாஷின் உயிரிழந்ததாக பலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர் சென்ற காரை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில், நான்குபேர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஹவாஷின் மற்றும் நான்கு செயற்பாட்டாளர்களில் ஒருவரான அஹ்மத் பாரகாத், மார்ச் 11 அன்று இஸ்ரேலுக்குள் ஒரு தற்கொலை குண்டுதாரியை அனுப்பும் முயற்சிகளுக்குப் பின்னால் இருந்துள்ளார்.

மேலும் மார்ச் 8 அன்று ஹோமேஷ் அவுட்போஸ்ட் அருகே துருப்புக்களுக்கு எதிராக குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை