சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

user 23-Mar-2024 பொருளாதாரம் 5 Views

சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்வதற்கு தனியார் முதலீட்டாளரினால் முறையான ஏலத்தொகை சமர்ப்பிக்கப்படாவிடின், அதனை தனித்தனியாக மூன்று நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சிறிலங்கன் எயர்லைன்ஸின் சிறிலங்கன் கட்டரிங், விமான நிலைய சேவை நடவடிக்கைகள் மற்றும் விமானச் செயற்பாடுகளை மூன்று நிறுவனங்களாகப் பிரித்து விற்பனை செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

சிறிலங்கன் எயர்லைன்ஸ் தற்போது சிறிலங்கன் விமான நடவடிக்கைகளில் மட்டுமே நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும், சிறிலங்கன் கேட்டரிங் மற்றும் விமான நிலைய சேவை நடவடிக்கைகளில் நஷ்டம் ஏற்படவில்லை என்றும் சிறிங்கன் எயர்லைன்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே, கட்டரிங் மற்றும் விமான நிலையச் சேவை நடவடிக்கைகளைத் தனியாரிடம் ஒப்படைத்து, அரசாங்கத்தின் கீழ் விமானச் செயற்பாடுகளை நடத்துவதற்கு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை