நான்கு வருடங்களின் பின்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த தாய்லாந்து விமானம்

user 01-Apr-2024 இலங்கை 6 Views

நான்கு வருடங்களின் பின்னர் தாய் ஏர்வேஸ் விமானம் ஒன்று இலங்கையை வந்தடைந்துள்ளது.

தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தாய்லாந்து பிரஜைகள் உட்பட 150 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தீவிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் தினமும் விமான சேவைகள் நடத்தப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை