மேற்கு வங்காளத்தில் சூறாவளி !

user 01-Apr-2024 இந்தியா 4 Views

சூறாவளி தாக்குதலுக்கு இலக்கான மேற்கு வங்காளத்தை முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

 

மேற்கு வங்காளத்தின் ஜல்பைகுரி நகரில் நேற்றிரவு வீசிய கடுமையான சூறாவளியால் பெண்ணொருவர் உட்பட ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 500 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

மேலும் பல இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னுடைய அனைத்து நிகழ்ச்சிகளையும் இரத்து செய்து விட்டு நேற்றிரவு ஜல்பைகுரிக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டுள்ளார்.

ஜல்பைகுரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு சென்று சூறாவளியால் பாதித்த மக்களை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுபற்றி மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களுக்கு தேவையான உதவிகளை அரச நிர்வாகம் வழங்கும். சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்பு விபரங்களை நாங்கள் அறிந்திருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், பேரிடர் மேலாண் முயற்சிகளை மேற்கொண்ட நிர்வாகத்தினருக்கும் நன்றி தெரிவித்த அவர், டொக்டர்கள், தாதியர்கள் மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை