Monday, September 16, 2024
இந்த நாட்டிலே தமிழர்களுக்கு உரிமை சார்ந்த தீர்வுமில்லை. கல்முனை வடக்கு விடயத்திலும் தீர்வில்லை. இன்னுமொரு பிரதேச செயலகத்தின் கீழ் அடிமைகளாக இருந்து செயற்பட வேண்டிய நிலையில் அதிகாரிகள். பொது நிர்வாக அமைச்சர்,
அமைச்சின் அதிகாரிகள் நேரடி விஜயம் செய்து இந்த நாட்டில் திட்டமிட்டு ஒரு பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் அநீதிகளை இனங்கண்டு, அவற்றை விசாரணை செய்து அந்த மக்களுக்கு உரிய தீர்வினைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்