தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பு !

user 25-Apr-2024 இலங்கை 3 Views

பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், விரைவு தொடருந்து மிதி பலகைகளில் சவாரி செய்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் (Railway Department) தெரிவித்துள்ளது.

இதனை மீறும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் விபத்துகளுக்கு தாம் பொறுப்பேற்க மாட்டோம் என்று திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிதி பலகைகளில் குறிப்பாக மலையக தொடருந்துகளில் சவாரி செய்வதை அவதானித்த பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை