நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூர்யோற்சவ உற்சவம்!

user 27-Aug-2024 இலங்கை 8 Views

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோட்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவான சூர்யோற்சவ உற்சவம் இன்று காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் எழுந்தருளிய சூரியபகவான் உள் வீதியுலா, மற்றும் வெளி வீதியுலாவும் வந்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார்.

இதேவேளை, சூரிய திருவிழாவான இன்றையதினம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

நல்லூர் மகோற்சவத்தின் தேர் திருவிழா எதிர்வரும் முதலாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் திருவிழாவின் நேரடியான காட்சிகளை ஆதவன் தொலைக்காட்சியில் நேரலையாக நேயர்கள் கண்டுதரிசிக்க முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை