மசூதி மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் – சிறுவா்கள் உட்பட 24 போ் உயிரிழப்பு!

user 16-May-2024 உலகம் 5 Views

மசூதிக்குள் தொழுகையில் இருந்தவர்கள் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் – காயமடைந்த 24 பேரில் அறுவர் உயிரிழப்பு!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் மசூதிக்குள் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டத் தாக்குதலில் சிறுவா்கள் உட்பட 6 பேர் உயிரிந்துள்ளனர்.

நைஜீரியாவில் கானோ மாகாணம், கடான் கிராமத்திலுள்ள மசூதியில் நேற்று (16 புதன்கிழமை) தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இத் தாக்குதலில், 4 சிறுவர்கள் உட்பட 24 போ் காமடைந்திருந்த நிலையில், அவர்கள் 6 பேர் நேற்று உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தாக்குதலை நடத்திய 38 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை , இது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் அல்ல எனவும், மதப் பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே தாக்குதலுக்குக் காரணம் என அதிகாரிகள் கூறினா்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை