Monday, September 16, 2024
காலநிலை மாற்றம் மற்றும் அதிக வெப்பம் காரணமாக இமயமலை பகுதியில் இருக்கும் பனிப்பாறைகள் வேகமாக உருகுவதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியாவில், வட மாநிலங்களில் கோடை வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.
பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் பொதுமக்கள், பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அதிக வெப்பம் காரணமாக, இமயமலைப் பகுதியில் இருக்கும் ஏரிகளின் விரிவாக்கத்திற்கும் புதிய ஏரிகள் உருவாவதற்கும், பனிப்பாறை விரிவடைதல் வழிவகுப்பதாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகள் உருகுவதன் மூலம் உருவாகும் இந்த நீர்நிலைகள் பனிப்பாறை ஏரிகள் என அழைக்கப்படுகிறது.
பனிப்பாறை விரிவடைவதால் ஏரி வெடிப்பு, பெரு வெள்ளங்கள் போன்ற குறிப்பிடத்தக்க அபாயங்களும் ஏற்படுவதாகவும், இது பேரழிவு தரும் விளைவுகள் எனவும் இஸ்றோவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோரைன் அல்லது பனிக்கட்டி போன்ற இயற்கை அணைகள் உடைவதால் பனிப்பாறை ஏரிகள் அதிக அளவு உருகும் நீரை வெளியிடும் போது வெள்ளம் ஏற்படுகிறது. இதன் விளைவாக கீழ்நோக்கி திடீர் மற்றும் கடுமையான வெள்ளம் ஏற்படுகிறது.