Monday, September 16, 2024
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.
இன்னிலையில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் புதிய கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி இதில் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி என்பன அடங்குகின்றன.
மேலும் 942 மில்லியன் ரூபா செலவில் யாழ்.பல்கலைக்கழகத்தில் 46 வருடங்களின் பின்னர் புதிய கட்டிடம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.