முல்லைத்தீவில் நடைபெற்ற சிறுகைத்தொழில் முயற்சியாளர் சந்தை கண்காட்சி

user 12-Jul-2024 இலங்கை 7 Views

சிறு கைத்தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவோம் என்ற கருப்பொருளில் சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் சந்தை கண்காட்சி நடைபெற்றுள்ளது.

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த 8ம் திகதி (08.07.2024) இடம்பெற்றது.

காலை 9 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற்ற இந்த நிகழ்வு சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு பெரும் பயனுடையதாக இருப்பதாக பங்கேற்றிருந்த சிறுகைத் தொழில் முயற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள் பங்கெடுத்து இருந்த இந்த நிகழ்வு மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றிருந்தது.

முல்லை தொழில் முயற்சியாளர் விற்பனைக் கண்காட்சி - 2024 என்ற தலைப்போடு இந்த ஒரு நாள் பொழுது வியாபார கண்காட்சி நடைபெற்றிருந்தது.

யாழ் சமூக செயற்பாட்டு மையம் மற்றும் சிறு தொழில் அபிவிருத்தி பிரிவு பிரதேச செயலகம் கரைத்துறைபற்றின் ஏற்பாட்டில் இக்கண்காட்சி ஏற்பாடாகி இருந்தது.

கண்காட்சி 2024 இல் உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், பனைசார் உற்பத்திகள், வியாபார ஆலோசனை,தோற்பொருள் உற்பத்திகள், விவசாய உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், அழகுக் கலை தொடர்பான சேவைகள் என கண்காட்சியை அலங்கரித்து இருந்தன.

இது போன்ற முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதால் சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு சிறந்த வியாபார விளம்பரம் கிடைக்கும் என டிஜிட்டல் வியாபாரத் துறையில் பணியாற்றும் தொழில் முயற்சியாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை