சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் விசேட தீர்மானம்

user 31-Jul-2024 இலங்கை 20 Views

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவு வேட்பாளர் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவுள்ளது.

தமது கட்சி ஆதரிக்கும் ஜனாதிபதி வேட்பாளரை இன்று (31.07.2024) அறிவிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க நேற்று (30) அறிவித்திருந்தார்.

கொழும்பு டாலி வீதியிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

மேலும் கட்சியின் உயர்மட்ட செயற்குழு, கூடி பெரும்பான்மையின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும்எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீரவும் கலந்துக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி 14 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை