பங்களாதேஷின் பிரதமருக்கு எதிராகத் தொடரும் போராட்டங்கள்!

user 05-Aug-2024 உலகம் 9 Views

பங்களாதேஷின் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டில் மீண்டும் போராட்டங்கள் மேலும் வலுப்பெற்று வருவதாக சா்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று இடம்பெற்ற போராட்ங்களில் 70 இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று நடத்தப்பட்ட குறித்த போராட்டங்களைக் கலைப்பதற்காக பங்களாதேஷ் பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், பங்களாதேஷில் நேற்று காலை 6 மணிமுதல் மறு அறிவித்தல் வரை, முழுமையான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் இன்று முதல்  3 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு கோரி அந்த நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

குறித்தப் போராட்டம் அந்த நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து பங்களாதேஷ் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில் தற்போது வீதிகளில் இறங்கிப் போராடுபவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்ல எனவும் அவர்கள் நாட்டை சீர்குலைக்கும் பயங்கரவாதிகள் எனவும் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை