ஆபத்தில் இருந்து மீளாத இலங்கை பொருளாதாரம் !

user 25-Mar-2024 பொருளாதாரம் 5 Views

இலங்கையின் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்றையதினம்(23) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை அத்தோடு அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கிய பிரச்சினையாக பேசப்படும்.

பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வருவதோடு தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை