முல்லைத் தீவு பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இளைஞர் கைது!

user 29-Mar-2024 இலங்கை 8 Views

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளபகுதியில் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு 8 மணியளவில் இக் கைது இடம்பெற்றுள்ளது.

 

புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குளத்தின் அருகிலுள்ள காட்டு பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, கசிப்பு 56,000 மில்லிலீற்றர், 3 கொள்கலன்களுக்குள் 75,000 மில்லி மீற்றர் எரிந்த கோடாவும், கசிப்பு உற்பத்தியாக்குவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட உடையார்கட்டு தெற்கு மூங்கிலாறு பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவரையும் புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை