மைத்திரிபால சிறிசேன தலைவராக செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை நீடிப்பு!

user 29-May-2024 இலங்கை 6 Views

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று (புதன்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அரசியலமைப்பின் பிரகாரம், கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சட்டப்பூர்வ உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறித்த பதவியில் தாம் பணியாற்றுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி சிறசேன இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை