Monday, September 16, 2024
ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் இன்று சிவில் சமூகத்தினர் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் காலை 11 மணியளவில் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரியக்க ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள், இணை ஒருங்கிணைப்பாளர் சீலன், அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ.யோதிலிங்கம், பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்