சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் சிக்கல் !

user 26-Jun-2024 உலகம் 12 Views

சர்வதேச விண்வெளி ஆய்வு மைத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ்(sunita williams) மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருவரும் திட்டமிட்டப்படி ஜூன் 22ம் திகதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டிய நிலையில், தொழில் நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திய வம்சாவளியான சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மூத்த விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் (வயது 61) ஆகியோர் அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ரொக்கெட் மூலம் சர்வதேச ஜூன் 5ம் திகதி விண்வெளிக்கு பயணித்தனர்.

ஜூன் 06ம் திகதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்த அவர்கள் 9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர்.

இந்நிலையில், தற்போது, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

விண்வெளி மையம் சென்ற இருவரும் திட்டமிட்டபடி ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும் ஆனால் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் வாயுக்கசிவு உள்ளிட்ட தொழில் நுட்பக் கோளாறுகள் காரணமாக பூமி வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இன்னும் விண்கலம் பூமிக்கு திரும்ப 27 நாட்களுக்கு தேவையான எரிபொருள் தான் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எனவே, சுனிதா வில்லியம்ஸை மீட்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா(Nasa) கோரலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே 2 முறை விண்வெளி நிலையத்துக்கு சென்றுள்ளதுடன் விண்வெளிக்கு பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை