வரி இலக்கத்தை பெறுவதற்காக மாத்திரம் பதிவு செய்தவர்கள் !

user 03-Jul-2024 இலங்கை 7 Views

வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் பெறுவதற்காக மட்டும் பதிவு செய்த ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வரிக் கோப்புகளை தற்போது உள்நாட்டு இறைவரித் திணைக்களம் திறந்துள்ளது.

இவ்வாறு திறக்கப்பட்ட கோப்புகளில் உள்ளவர்கள் உடனடியாக வரி செலுத்துமாறு எழுத்து மூலம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனது வரி இலக்குகளை அடைவதை நோக்கமாகக் கொண்டு வரிக் கோப்புகளை திறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த குழுவில் ஏற்கனவே சம்பளத்தில் இருந்து வரி செலுத்துபவர்களும், ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் ஈட்டுபவர்களும் வேறு எந்த வருமானமும் பெறாதவர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரி செலுத்துவோரை அடையாளம் காண மட்டுமே வரி செலுத்துவோர் அடையாள எண் வழங்கப்படும் என இறைவரி திணைக்களம் அறிவித்திருந்தது.

மேலும், இந்த இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடப்பட்டிருந்தது.

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை