சூர்யாவின் முக்கிய படம் டிராப்.. இந்த இயக்குனருடனும் பிரச்சனையா?

user 20-Mar-2024 பொழுதுபோக்கு 9 Views

நடிகர் சூர்யாவின் கெரியர் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் நடித்து மிரட்டி இருந்த நிலையில், சூர்யாவுக்கு அதன் பிறகு எந்த படமும் இதுவரை ரிலீஸ் ஆகவில்லை.

கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்திருக்கும் நிலையில், அந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்று அந்த படத்தின் டீஸர் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அடுத்து சூர்யா இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி சேர இருப்பதாக அறிவிக்கப்பட்டு அந்த படத்திற்கு புறநானூறு என்றும் டைட்டில் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படம் இன்னும் நேரம் எடுத்துக்கொள்ளும் என சூர்யா நேற்று நள்ளிரவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் சுதா கொங்கராவின் கையெழுத்தும் இருந்தது.

சூர்யா மற்றும் சுதா கொங்கரா இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படம் டிராப் ஆகிவிட்டது என்றும், தொடர்ந்து ரசிகர்களிடம் இருந்து கேள்விகள் வர கூடாது என்பதற்காக தான் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்கள் என சினிமா துறையில் பரவலாக பேசப்படுகிறது.

ஏற்கனவே பாலா உடன் வந்த பிரச்சனையால் வணங்கான் படத்தில் இருந்து சூர்யா விலகினார், தற்போது புறநானூறு படமும் இப்படி ஆகி இருக்கிறது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை