Monday, September 16, 2024
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஜனாதிபதி தேர்தலுக்காக இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சஜித் பிரேமதாச சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் நோக்கில் வேட்பு மனுத் தாக்கல் செய்த ஆறாவது வேட்பாளராக சஜித் இணைந்து கொண்டுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் சஜித் பிரேமதாச போட்டியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.