பிரித்தானிய கலவரம் குறித்து எலான் மஸ்க்கின் சர்ச்சைக்குரிய பதிவு !

user 12-Aug-2024 உலகம் 9 Views

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க்(Elon Musk) பிரித்தானியாவில் நடந்து வரும் கலவரம் குறித்து எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில்  அவர் "பிரித்தானியாவில் 2030ஆம் ஆண்டு நீங்கள் ஒரு meme பதிவிடுவதற்காக தூக்கிலிடப்படலாம்." என கூறியுள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக பிரித்தானியாவில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. பல நகரங்களில் கலவரங்கள் வெடித்ததால் அமைதியின்மை நிலவுகிறது.

இந்நிலையில் நிகழ்நிலை(online) வழியாக வெறுப்பினை தூண்டியதாக கைது செய்யப்பட்ட ஜோர்டான் பார்லர் என்ற நபர் சிறைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்தே பிரித்தானியாவில் நிலவும் சூழல் குறித்து எலான் மஸ்க் இந்த பதிவை வெளிப்படுத்தியுள்ளார்.

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை