Monday, September 16, 2024
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 5 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று காலை 6.45 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதன்பின்னர் ஏழு நிமிட இடைவெளியில் 6.52 அளவில் 4.8 என்ற ரிக்டர் அளவில் மற்றுமொரு நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள், வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
அத்துடன் வீடுகளில் இருந்த பொருட்கள் நிலநடுக்கத்தினால் அதிர்ந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.