யாழ் தையிட்டியில் பதற்றம்!

user 24-May-2024 இலங்கை 3 Views

யாழ் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் கடந்த ஒரு வருடத்தை தாண்டி முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் இன்று காலை அதிகளவான மக்கள் திரண்டு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

 

வெசாக் தினத்தை கொண்டாடுவதற்காக தென் பகுதியில் இருந்து சிங்கள மக்கள் குறித்த விகாரைக்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது பல நூற்றுக்கணக்கான மக்கள் அணி திரண்டு, அனுமதியின்றி மக்களது காணியில் கட்டப்பட்ட குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை