ஜனாதிபதி ரணில் பக்கம் தாவிய அங்கஜன் இராமநாதன்

user 23-Aug-2024 இலங்கை 11 Views

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) ஆதரவு வழங்க மேலும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

தங்களது ஆதரவை இன்று (23) கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காரியாலயத்தில் ஜனாதிபதியைச் சந்தித்து வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் (SLPP) யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) மற்றும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான சாரதி துஸ்மந்த (Sarathi Dushmantha) ஆகியோரே இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

இதேவேளை நேற்றையதினம்(22) முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்னவும் (SB Navinna) ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி தேர்தல் சூடுப்பிடித்துள்ள நிலையில் கட்சித்தாவல்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

 

 

 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை