Monday, September 16, 2024
எதிர்வரும் வாரங்களில் அமைச்சரவை மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் கட்சிகள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் உயர்மட்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை சாத்தியமான மறுசீரமைப்பு, அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திட்டமிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையானது வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கான தயார்படுத்தலில் ஆளும் கட்சியின் நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாக நம்பப்படுகிறது.
வரவிருக்கும் அமைச்சரவை மறுசீரமைப்பு, தீவிரமான சூழ்ச்சிகள் மற்றும் மூலோபாய சீரமைப்புகளால் வகைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.