Monday, September 16, 2024
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 21ம் திருவிழாவான இன்றைய தினம் வியாழக்கிழமை காலை கஜவள்ளி மஹாவள்ளி உற்சவம் இடம்பெற்றுள்ளது
அதன்படி காலை நடைபெற்ற வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து அன்னப்பட்சி வாகனத்தில் கஜவல்லி மஹாவள்ளி எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
அதேவேளை இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை தங்க ரத உற்சவமும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை மாம்பழத்திருவிழாவும் மாலை ஒருமுக திருவிழாவும் இடம்பெறவுள்ளது.