Monday, September 16, 2024
திடீர் சீரற்ற காலநிலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிரமங்களைத தவிர்ப்பதற்காக படையினர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
பெலும்மஹரவில் இருந்து வெலிவேரிய செல்லும் வீதி வெள்ளத்தில் மூழ்கியிருந்தமையினால் இராணுவத்தின் 141 ஆவது படைப் பிரிவினரால் இராணுவ ட்ரக் வண்டிகளைப் பயன்படுத்தி மக்களை ஏற்றிச் செல்வதற்கு ஏற்பாடு செய்துக்கொடுத்துள்ளனர். மக்களின் போக்குவரத்து மற்றும் ஏனைய தேவைகளைப் பெற்றுக் கொள்ள இது பெரிதும் உதவியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களின் உணவுத் தேவையை வழங்குவதற்கும் படையினர் செயற்பட்டுள்ளதுடன், அக்குரஸ்ஸ உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.