ஆப்கானில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் !

user 22-Mar-2024 உலகம் 3 Views

ஆப்கானிஸ்தானில்  நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதல் சம்பவமானது நகர மையத்தில் அமைந்துள்ள வங்கியில் நேற்று (21) இடம்பெற்றுள்ளதாக  தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த  தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்கள் சம்பளம் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த நிலையில் பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த சுமார் 50 பேர் மிர்வாய்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் நடந்த மிகப்பெரிய தாக்குதலை தாங்கள் நடத்தியதாக எந்த குழுவும் இதுவரை அறியத்தரவில்லை 

 

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை