நடு வீதியில் அடிதடியில் இறங்கிய அரச - தனியார் பேருந்து ஊழியர்கள்!

user 26-Mar-2024 இலங்கை 9 Views

 பதுளையில் தனியார் பஸ் ஊழியர்களுக்கும் அதே பாதையில் இயங்கும் அரச பஸ் ஊழியர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த மோதல் நேற்று (25) மாலை பதுளை மத்திய பஸ் நிலையத்தில் ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த அரச ஊழியர்கள் இருவர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் பஸ் சாரதி மற்றும் உதவியாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அதேவேளை பஸ் இயங்கும் நேரம் ஏற்பட்ட வாக்குவாதத்தில், தனியார் பஸ் சாரதி, அரச பஸ் சாரதி மற்றும் நடத்துனரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Post

all-posts.php

பிரபலமான இடுகை